தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியை கொலைகாரர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Updated On :29 அக்டோபர் 2025, 1:18 pm IST

பிரதமர் நரேந்திர மோடியை கொலைகாரர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்று வரும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப் பேசுகையில், ``இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யவிருக்கிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது. எங்களுக்குள் ஒரு நல்ல உறவும் உள்ளது.

அதேபோல, பாகிஸ்தான் பிரதமரும் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒரு சிறந்த போராளி. இருவருக்கிடையுமான போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இருவரையும் அழைத்து, அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்று கூறினேன். ஆனால், அவர்கள் இருவரும் போரை நிறுத்த முடியாது என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் வலிமையான மனிதர்கள். பிரதமர் மோடி சிறந்த மனிதர்.

அவரைப் போல தந்தையைப் பெற நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவர் ஒரு கொலைகாரர்; நரகத்தைவிட மோசமானவர். நாங்கள் போரிடுவோம் என்றுதான் பிரதமர் மோடி கூறினார், நான் சொன்னேன் - அச்சோ, இவர்தான் எனக்குத் தெரிந்த அதே மனிதர்.

இருப்பினும், இரு நாள்களுக்குப் பிறகு அவர்கள் என்னை அழைத்ததுடன், போரையும் நிறுத்திக் கொண்டனர். அது எப்படி? ஆச்சரியமாக இல்லையா? பைடன் இதைச் செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால், எனக்கு அப்படி தோன்றவில்லை’’ என்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதனையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்ற இந்தியா, தாக்குதலை நிறுத்தியது.

இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாகக் கூறியதால்தான், போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இருப்பினும், டிரம்ப்பின் கூற்றை மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

Summary

'Father, killer, tough as hell': Trump calls PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.