தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தற்கொலை செய்துகொண்ட மருத்துவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்: ராகுல்

தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரின் குடும்பத்தோடு ராகுல் காந்தி பேச்சு..

News image
ராகுல் காந்தி
Updated On :29 அக்டோபர் 2025, 7:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரோடு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

மருத்துவரின் குடும்பத்தினர் அவருக்கு நீதி கோரி, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டனர். மேலும், மருத்துவரின் மரணம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆகிறது என்றும், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுவதாகவும் அவர்கள் கூறினர்.

இதனிடையே, மருத்துவரின் குடும்பத்தோடு தொலைபேசியில் உரையாடிய ராகுல்காந்தி மருத்துவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீதிக்கான போராட்டத்தில் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த 29 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், அவரது வீட்டு உரிமையாளரின் மகனும் கடந்த 4 முதல் 5 மாதங்களாகத் துன்புறுத்தி வந்த நிலையில், தற்கொலை நிகழ்ந்திருக்கின்றது.

அக். 23-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உள்ளங்கையில் மராத்தியில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது உள்ளங்கையில் எழுதப்பட்ட குறிப்பின்படி, காவல்துறை ஆய்வாளர் கோபால் படான், மென்பொருள் பொறியாளரான பிரசாந்த் பங்கர் ஆகிய இருவரும் அக்டோபர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.