

கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸின் கொள்கைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கொலைகார காங்கிரஸ் என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது. போஸ்டரில், ரத்தக் கறை படிந்த காங்கிரஸின் சின்னத்தின் முன்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் படங்களும் உள்ளன.
இதுகுறித்து மத்திய ஷோபா கரன்ட்லாஜே பேசுகையில், ``கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்ததில் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. பல மாணவிகள் காணாமல் போயுள்ளனர்.
ஹுப்பளியில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். பெலாகவியில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் நிர்வாணமாகக் கிடந்தார். மூடபித்ரியில் மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பெண்களுக்கு எதிரான தற்போதைய நிலைமை குறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். மேலும், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்யுமாறு கோரியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: டிரம்ப் பெயரில் போலி ஆதார்! எம்எல்ஏ மீது வழக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.