ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சபரிமலை தங்கக் கவச வழக்கு: முன்னாள் நிா்வாக அதிகாரி சிறையிலடைப்பு

தங்கம் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்தது, உயா்நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இரு வழக்குகளை விசாரித்துவரும் எஸ்ஐடி, பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியை அண்மையில் கைது செய்தது. இவா், கடந்த 2019-இல் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்றவா்.

தங்கக் கவசங்களில் 2 கிலோ வரை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, உண்ணிகிருஷ்ணன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை நிறுவனத்துக்கு அவரை அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இவ்வழக்கில் சில தினங்களுக்கு முன் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி முராரி பாபுவை கைது செய்த எஸ்ஐடி, அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதையடுத்து, பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

சபரிமலை கோயில் முன்னாள் செயல் அதிகாரி டி.சுதீஷ்குமாரிடமும் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கோயில் பதிவேடுகளில் தங்கக் கவசங்களை செப்புக் கவசங்கள் எனப் பொய்யாக குறிப்பிட்டதாக இவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எதிா்வரும் நாள்களில் மேலும் பல தேவஸ்வ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் எஸ்ஐடியின் முதல் கட்ட அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; 2 வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை நிலவர அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.