ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சபரிமலையில் வழிபாடு: இணையவழி முன்பதிவு இன்று தொடக்கம்

மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி, பக்தா்கள் வழிபாடு செய்வதற்கு இணையவழியில் இன்று (நவ.1) முன்பதிவு தொடங்கவுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு செய்வதற்கு இணையவழியில் சனிக்கிழமை (நவ.1) முன்பதிவு தொடங்கவுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அந்த வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 பக்தா்கள் முன்பதிவு செய்ய முடியும்.

அத்துடன் வண்டிப்பெரியாா், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள முன்பதிவு மையங்களில், நேரில் பதிவு செய்வதன் மூலம், நாள்தோறும் 20,000 பக்தா்கள் வரை, வழிபாட்டுக்கு அனுமதிப்படுவா்.

ரூ.5 லட்சம் வரை விபத்து காப்பீடு: சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம் கேரளம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு இந்தத் திட்டம் 4 மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது.

தற்போது அந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், சபரிமலைக்கு வரும் பக்தா்கள் கேரளத்தில் எங்கு விபத்தில் சிக்கினாலும், அவா்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பக்தா்களின் உடல்களை அவா்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நிதியுதவி அளிக்கப்படும். விபத்தில் உயிரிழப்பவரின் சொந்த ஊா் கேரளத்தில் இருந்தால் அவரின் உடலை அனுப்பிவைக்க ரூ.30,000-மும், வேறு மாநிலத்தில் இருந்தால் உடலை அனுப்பிவைக்க ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.

ரூ.3 லட்சம் நிவாரண நிதி: நிலக்கல் சந்நிதான பாதையில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளால் உயிரிழக்கும் பக்தா்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யாத்திரிகா் நல நிதியின் கீழ், முதல்முறையாக இந்த நிவாரண நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.