மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

News image
நிலச்சரிவு (கோப்புப்படம்)
Updated On :1 செப்டம்பர் 2025, 6:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை காலை 7.34 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

முன்கட்டியா மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டதில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார்.

மேலும், வாகனத்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர், இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்கள் சோன்பிரயாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்குப் பலத்த காயமடைந்த இருவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள பர்கோட்டைச் சேர்ந்த ரீட்டா (30) மற்றும் சந்திர சிங் (68) என இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித் சௌகான், நவீன் சிங் ராவத், பிரதிபா, மம்தா, ராஜேஸ்வரி மற்றும் பங்கஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உத்தரகண்டில் மழை சீற்றத்தால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரி மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் மழை தொடர்பான தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 29 அதிகாலை உத்தரகாண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் தொடர் மேக வெடிப்புகள் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காணாமல் போயினர். இதனால் வீடுகள் சேதமடைந்து மக்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

சாமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்கள் வெள்ளிக்கிழமை இயற்கை பேரழிவின் தாக்கத்தைச் சந்தித்தன. இந்த மழைக்காலங்களில் உத்தரகண்ட் இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

summary

A landslide on the Kedarnath national highway left two people dead and six others injured on Monday, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.