ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போதுவரை வங்கிக்கு திரும்பவில்லை

News image
கோப்புப் படம்
Updated On :1 செப்டம்பர் 2025, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போதுவரை வங்கிக்கு திரும்பவில்லை என ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளை கடந்த பின் தற்போது ரூ.5,956 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை. இதன்மூலம் 98.33 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அலுவலகங்கள் மூலம் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அவா்களது வங்கிக்கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை சேமிப்புக் கணக்கில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி தங்கள் சேமிப்புக் கணிக்கில் செலுத்திக்கொள்ள முடியும்.