இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் இந்தியா வருவது குறித்து...

News image

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் - எக்ஸ்

Updated On :2 செப்டம்பர் 2025, 11:32 am IST

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.2) இந்தியா வருகிறார்.

தலைநகர் தில்லிக்கு வருகைத் தரும் பிரதமர் லாரன்ஸ் வாங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். இதையடுத்து, மதியம் பிரதமர் மோடி அளிக்கும் விருந்திலும் அவர் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களையும், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலையும் அவர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், பிரதமர் வாங் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காத்தில் அஞ்சலி செலுத்துவார் எனவும், இந்தியாவில் வசிக்கும் சிங்கப்பூர் நாட்டினரையும், இந்திய தொழிலதிபர்களையும் சந்தித்து உரையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா - சிங்கப்பூர் இடையிலான ராஜந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் லாரன்ஸ் வாங்-ன் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Singaporean Prime Minister Lawrence Wong is reportedly visiting India on a 3-day state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.