மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :3 செப்டம்பர் 2025, 2:30 pm

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாநில காவல் துறையினர், நேற்று (செப்.2) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக, இன்று (செப்.3) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், கைதானவர்களில் ஒருவர் ஏற்கெனவே ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிகுண்டுகளும், வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It is reported that 5 Naxals have been arrested by security forces in Chhattisgarh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.