சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாநில காவல் துறையினர், நேற்று (செப்.2) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக, இன்று (செப்.3) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், கைதானவர்களில் ஒருவர் ஏற்கெனவே ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிகுண்டுகளும், வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
It is reported that 5 Naxals have been arrested by security forces in Chhattisgarh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவா் கைது 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

ஜம்மு-காஷ்மீரில் 2,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: இணையவழியில் விற்றவா் கைது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



