விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஜார்க்கண்டில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :3 செப்டம்பர் 2025, 11:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏராளமான முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெரும்பாலான, வட மாநிலங்களில் பருவமழையின் தாக்கமானது பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது ஜார்க்கண்டிலும் அதிகளவில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், ஜார்க்கண்டின் கும்லா, சிம்டேகா மற்றும் மேற்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களுக்கு, நாளை (செப்.4) வரை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கர்ஹ்வா, பலாமு, லடேஹர், லோஹர்டகா, குந்தி, சராய்கேலா கார்சவான் மற்றும் கிழக்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், நிகழாண்டில் (2025) ஜூன் 1 முதல் செப்.1 ஆம் தேதி வரையில் ஜார்க்கண்டில் பெய்த கனமழையின் அளவானது, வழக்கத்தை விட 26 சதவிகிதம் அதிகரித்து 1034.9 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

summary

The India Meteorological Department has issued an orange alert for heavy rains for three districts of Jharkhand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.