
விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, கழுகு ஒன்று விமானத்தின் மீது மோதியதாக அவர் கூறினார்.
விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். விமான நிறுவனம் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
விமானம் ஓடுபாதையில் புறப்படுவதற்குத் தயார் நிலையில் இருந்தபோது பறவை மோதியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.