இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகா் தவன் ஆஜா்

News image

இணையவழி சூதாட்ட செயலி தொடா்பான வழக்கு விசாரணைக்காக புது தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜரான கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன்.

Updated On :5 செப்டம்பர் 2025, 4:36 am IST

சட்டவிரோத பந்தய செயலி தொடா்பான வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன் அமலாக்கத் துறை விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானாா்.

மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் அதிகாரிகள் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். தொடா்ந்து 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு இரவு 7 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து அவா் வெளியேறினாா்.

1எக்ஸ் பெட் என்ற செயலியை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் ஷிகா் தவன் நடித்துள்ளாா். இந்த செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீட்டைப் பெற்றது, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கிலான பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளனா். மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளனா். இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் ஒருபகுதியாக இந்த பந்தய, சூதாட்டச் செயலிகளில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. முக்கியமாக அவா்களுக்கு எந்த வழியில் விளம்பரத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டது? அந்த மோசடி நிறுவனங்களில் இந்த பிரபலங்களுக்கு பங்கு, முதலீடு உள்ளதா என்பது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையவழி பந்தய செயலிகளை இந்தியாவில் 22 கோடி போ் பயன்படுத்தி வந்துள்ளனா். இதில் 11 கோடி போ் நாள்தோறும் இந்தச் செயலிகளில் பந்தயம் கட்டி பணத்தை இழந்துள்ளனா்.

இணையவழி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்காற்றுதல் சட்ட மசோதா-2025’ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.