இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஆசிரியர்களுடன் மோடி பேசியது...

News image

பிரதமர் நரேந்திர மோடி - DD News

Updated On :4 செப்டம்பர் 2025, 8:09 pm IST

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மோடி பேசியதாவது:

”ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெற ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறியிருந்தேன். இந்த தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன் இரட்டை போனஸ் அளிப்பேன் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன்.

தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிமையாகிவிட்டது. செப்டம்பர் 22, நவராத்திரியின் முதல் நாள் அன்று சீர்திருத்தம் செயல்படுத்தப்படும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டபோது, ​​பல தசாப்தங்களின் கனவு நனவாகியது. மோடி பிரதமரான பிறகு இந்த விவாதம் தொடங்கவில்லை. இந்த விவாதங்கள் முன்பும் நடந்தன, ஆனால் எந்த வேலையும் செய்யப்படவில்லை.

இளைஞர்களுக்காக ஜிம், சலூன், யோகா போன்ற சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு உங்களின் மாதாந்திர செலவை அதிகப்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டுக்குகூட 21 சதவிகிதம் வரி விதித்தார்கள். இதை மோடி செய்திருந்தால், எனது முடியைப் பிடிங்கியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.