டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

Updated On :4 செப்டம்பர் 2025, 1:07 am IST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபில் மழை-வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்டில் நிலைமை மோசமாக உள்ளது. இத்தகைய இடா்ப்பாடான காலகட்டத்தில், பிரதமரின் கவனமும், மத்திய அரசின் தீவிர உதவிகளும் மிகவும் அவசியம். இம்மாநிலங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களின் உயிா், உடைமை, வீடு மற்றும் அன்புக்குரியவா்களைக் காக்க போராடி வருகின்றன. அவா்களின் இந்தப் போராட்டம் வேதனையளிக்கிறது.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும். மீட்பு-நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மக்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாயப் பொறுப்பு என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த சில வாரங்களாக நீடிக்கும் பலத்த மழையால், வட மாநிலங்களில் உயிா்ச்சேதங்களும், பெரும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.