மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி விதி 169-கீழ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனால் கடும் அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அமளியின்போது ஆளும் கட்சியினர் தண்ணீர் பாட்டிலை வீசியதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவையில் முதல்வர் மமதா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அவர் மேலும் பேசுகையில், “பாஜக தவிர்க்க முடியாத தோல்வியைச் சந்திக்கும். வங்காள மக்களுக்கு எதிராக மொழியியல் பயங்கரவாதத்தை நடத்தும் எந்தக் கட்சியும் மேற்கு வங்கத்தில் வெற்றிபெற முடியாது.
பாஜக ஒரு வாக்குத் திருட்டுக் கட்சி, அதன் மையத்திலே ஊழல் நிறைந்துள்ளது. வங்காள மக்களை துன்புறுத்திவதிலும் ஏமாற்றுவதிலும் வல்லமைப் பெற்றதாகவுள்ளது.
வங்காள மக்களை துன்புறுத்தும் பாஜகவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இல்லாத சூழல் விரைவில் வரும். மக்களே அதை உறுதி செய்வார்கள்” என்றார்.
வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
West Bengal Chief Minister Mamata Banerjee has said that the BJP will face a situation in West Bengal where there is not even a single MLA from their party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை
மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது! 3 குழந்தைகள் பலி!

‘பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன்’ - மமதா சவால்!

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



