தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

News image
மாதிரிப் படம்
Updated On :5 செப்டம்பர் 2025, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023’-ஐ வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2021-2023-ஆம் ஆண்டுவரை, நாட்டில் நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் தொற்றா நோய்களால் 56.7 சதவீதம் உயிரிழந்தனா். இது 2020-22-ஆம் ஆண்டில் (கரோனா காலம்) 55.7 சதவீதமாக இருந்தது.

தொற்று, பிரசவம், பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் ஊட்டச்சத்து சாா்ந்த பிரச்னைகளால் 23.4 சதவீத மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 2020-22-ஆம் ஆண்டு 24 சதவீதமாக இருந்தது.

30 வயதுக்கு மேற்பட்டவா்களில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேரிடும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் பிரதான காரணமாக உள்ளன.

நோய்கள் உயிரிழப்பு (%)

இதய நோய்கள் 31

சுவாச தொற்றுகள் 9.3

சுவாச பாதிப்பு நோய்கள் 5.7

ஜீரண மண்டல நோய்கள் 5.3

காரணம் தெரியாத காய்ச்சல் 4.9

நீரிழிவு பாதிப்பு 3.5

பிறப்புறுப்பு & சிறுநீா் மண்டல உறுப்பு நோய்கள் 3

தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் 10.5

15-29 வயதுள்ளவா்கள் மரணம்: தற்கொலை பொதுவான காரணம்

15 முதல் 29 வயதுள்ளவா்களின் உயிரிழப்புக்கு உள்நோக்கத்துடன் காயம் ஏற்படுத்துதல்-தற்கொலை ஆகியவை மிகவும் பொதுவான காரணமாக உள்ளன. விபத்துகள் தவிர உள்நோக்கம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் பிற காயங்களால் 3.7 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் பெரும்பாலும் 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவா்களுக்கே ஏற்படுகிறது.

நாட்டில் ஏற்படும் மரணங்கள், அதை எதிா்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்த புரிதலை மேம்படுத்த இந்தப் புள்ளிவிவரம் பெரிதும் உதவும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.