தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், கல்வாவில் உள்ள கோலாய் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா(19). இவர் மும்பையில் உள்ள முலுண்டிலிருந்து ரயிலில் பயணம் செய்தபோது வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஓடையில் விழுந்ததாக தாணே மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் யாசின் தத்வி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாணே பேரிடர் மீட்புப் படையின் பணியாளர்கள் இரண்டு படகுகளுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்களும் பங்கேற்றனர். வியாழக்கிழமை மாலை 6:15 மணி வரை தேடுதல் தொடர்ந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது.
இன்று மதியம் 12:30 மணிக்கு மீனவர்களால் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதிக நீர் ஓட்டம் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக தேடுதல் நடவடிக்கை தடைபட்டது என்றார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
The body of a 19-year-old man who fell into Vitawa creek near Kalwa in Thane district from a suburban train was recovered on Friday afternoon, a civic official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

இன்றிரவும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில் சேவை சீராகும்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



