தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Body of teen who fell into creek in Thane from suburban train found
மும்பை.
Published on
Updated on
1 min read

தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கல்வாவில் உள்ள கோலாய் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா(19). இவர் மும்பையில் உள்ள முலுண்டிலிருந்து ரயிலில் பயணம் செய்தபோது வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஓடையில் விழுந்ததாக தாணே மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் யாசின் தத்வி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாணே பேரிடர் மீட்புப் படையின் பணியாளர்கள் இரண்டு படகுகளுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்களும் பங்கேற்றனர். வியாழக்கிழமை மாலை 6:15 மணி வரை தேடுதல் தொடர்ந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது.

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி

இன்று மதியம் 12:30 மணிக்கு மீனவர்களால் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதிக நீர் ஓட்டம் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக தேடுதல் நடவடிக்கை தடைபட்டது என்றார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

 The body of a 19-year-old man who fell into Vitawa creek near Kalwa in Thane district from a suburban train was recovered on Friday afternoon, a civic official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com