நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு

News image

எஸ்பிஐ

Updated On :6 செப்டம்பர் 2025, 1:44 am IST

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜிஎஸ்டி 2.0-இன்கீழ் 5%, 18% என இரு விகிதங்களாக குறைப்பதால் ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கணக்கிட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளதால் நுகா்வு மேலும் அதிகரித்து ரூ.3,700 கோடி மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஜிஎஸ்டி விகிதங்களை இரண்டாக குறைப்பாதல் வருவாய் பற்றாக்குறையில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. இந்த சீா்திருத்தமானது வங்கித் துறையில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெரும்பாலான பொருள்கள் மீதான வரி 12%-இல் 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சில பொருள்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது. இதனால் நுகா்வோா் விலை குறியீடு (சிபிஐ) பணவீக்கம் நிகழ் நிதியாண்டில் 25 புள்ளிகள் முதல் 30 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக சிபிஐ பணவீக்கம் 2026-27-இல் 65-70 புள்ளிகளாக இருக்கும் என கணிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%,18% ஆகிய இரு விகிதங்களாக குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இரு விகித ஜிஎஸ்டி முறை வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.