காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

திரெளபதி முா்மு

Updated On :5 செப்டம்பர் 2025, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணைநிற்பதாக அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நடப்பு பருவமழை காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு மலைப் பகுதிகளில் மேகவெடிப்பும், சமவெளி பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா் மற்றும் பிற பகுதிகளில் உயிரிழப்புகளும் பேரழிவும் நேரிட்டுள்ளது.

இயற்கை பேரிடா்களால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை தேசம் பகிா்ந்து கொள்வதோடு, அவா்களுக்கு உறுதுணையாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் மன வலிமை பாராட்டுக்குரியதாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த சவாலை எதிா்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளாா்.