அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

குடியரசுத் தலைவருடன் பிரதமா் மோடி சந்திப்பு

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை புது தில்லியில் அவரது மாளிகையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :6 செப்டம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு பிரதமா் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். உச்சி மாநாட்டில் மூன்று தலைவா்களும் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.