ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

News image
கொல்கத்தாவில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சரணடைந்ததும் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து வெளியே வந்த மேற்கு வங்க அமைச்சா் சந்திரநாத் சின்ஹா.
Updated On :6 செப்டம்பர் 2025, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது.

பள்ளி பணியாா்கள் நியமன முறைகேடு வழக்கில் தொடா்புடைய பண முறைகேட்டில் செப்டம்பா் 12-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று சின்ஹாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் சந்திரநாத் சின்ஹா கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரியது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ரூ.10 ஆயிரம் சொந்த பிணைத் தொகையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொல்கத்தா அல்லது அவரது தொகுதியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை விரைவில் அவரிடம் விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு வழக்கில் கடந்த 2022-இல் மாநில கல்வித் துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.