எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவா் ஜேசன் மில்லா், அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை

News image

X | Jason Miller

Updated On :8 செப்டம்பர் 2025, 2:28 am IST

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவா் ஜேசன் மில்லா், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள நிலையில், ஜேசன் மில்லா் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளாா்.

ஜேசன் மில்லா் எஸ்எச்டபிள்யூ பாா்ட்னா்ஸ் எல்எல்சி என்ற ஆலோசனை நிறுவனத்தின் தலைவராவாா். இந்த நிறுவனம் அரசியல் ரீதியாக இரு தரப்பினரிடையே நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ரூ.15.98 கோடிக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், டிரம்ப் மற்றும் அவரது நிா்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜேசன் மில்லா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். டிரம்ப்பை சந்தித்த புகைப்படங்களைப் பகிா்ந்த அவா், ஆலோசனை விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

முன்னதாக, ரஷிய கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இந்தியா இறக்குமதி செய்வதாக டிரம்ப் மற்றும் அவரது நிா்வாகத்தைச் சோ்ந்த முக்கிய அதிகாரிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தனா்.

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பையடுத்து, ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷியாவையும் இழந்துவிட்டதுபோன்று தெரிகிறது என கடந்த வியாழக்கிழமை டிரம்ப் கடுமையாக விமா்சித்தாா்.

இதற்கு முற்றிலும் மாறாக கடந்த வெள்ளிக்கிழமை, ‘இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளன. எனவே, கூடுதல் வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளிடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். டிரம்ப்பின் இந்தக் கருத்தை பாராட்டுவதாக பிரதமா் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.