

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நலமாக உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. முதல்வர் பகவந்த் மானின் முக்கிய உடல் இயக்கங்கள் இயல்பாக இருப்பதாகவும், அவர் எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உடல்நலக் குறைவால் முதல்வர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.
ஆனால் உடல்நிலை பிரச்னை காரணமாக முதல்வர் பகவந்த் மானால் அவருடன் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.