அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

4 புதிய உருளைக்கிழங்கு ரகங்கள்: மத்திய அரசு அனுமதி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் 4 புதிய ரக உருளைக்கிழங்குகளை சாகுபடி செய்ய

News image
Updated On :8 செப்டம்பர் 2025, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

சிம்லா: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் 4 புதிய ரக உருளைக்கிழங்குகளை சாகுபடி செய்ய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தில் இந்த 4 புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் குஃப்ரி ரத்தன் நடுத்தர ரகம் 90 நாள்களில் நல்ல விளைச்சலை எட்டும். ஹரியாணா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயிரிட ஏற்றது. இந்த உருளைக்கிழங்கு சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இரண்டாவது ரகமான குஃப்ரி தேஜஸ் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட்டில் சாகுபடி தொடக்க காலத்திலும், மத்திய பிரதேசம், குஜராத், மகாாஷ்டிரத்தில் சாகுபடியின் முக்கிய காலத்திலும் விளைவிக்க முடியும். இது வெள்ளை நிறத்தில் இருக்கும். அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தவும் முடியும்.

குஃப்ரி சிப்பாரத்-1 என்ற மூன்றாவது ரக உருளைக்கிழங்கை ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் முக்கியப் பருவங்களில் பயிரிட முடியும். 100 நாள்களில் விளைச்சல் கிடைக்கும் இது சா்க்கரைஅளவு குறைவாகவே இருக்கும். அதிக நாள் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியும்.

குஃப்ரி சிப்பாரத்-2 என்ற நான்காவது ரகத்தையும் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் பயிரிட முடியும். 4 புதிய ரகங்களும் குறைந்த பரப்பளவில் நல்ல விளைச்சலைத் தரக் கூடியது.

‘இந்த புதிய ரகங்கள் இந்தியாவில் உருளைக்கிழங்கு சாகுபடியில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும். இது வெறும் அறிவியல் சாதனையல்ல. விஞ்ஞானிகள், விவசாயிகள், உருளைக்கிழங்கு சாா்ந்த தொழில் துறையினருக்கு கிடைத்த வெற்றி’ என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் பிரஜேஷ் சிங் தெரிவித்தாா்.