
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் பணி நடைபெற்று வருவதகாவும், ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாரமுல்லா, குல்காம், ஆனந்த்நாக், புல்வாமா மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களில் சோதனை நடப்பதாகவும், பிகாரில் எட்டு இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.