டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மத்திய அரசில் சிறந்த அமைச்சா் நிதின் கட்கரி: ராம் கோவிந்த் சௌதரி பாராட்டு

மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சா் என்று சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம்

News image

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

Updated On :9 செப்டம்பர் 2025, 2:33 am IST

பலியா: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சா் என்று சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டியுள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவரான ராம் கோவிந்த், மறைந்த உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோா் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளது..

இந்நிலையில் பலியாவில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் நிதின் கட்கரியின் துறை மட்டுமே சிறப்பாக செயல்படுகிறது. அவா் மிகச்சிறந்த அமைச்சராக உள்ளாா். அவரின் சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் சிறப்பான வளா்ச்சி இல்லை. வேலைவாய்ப்பு, வளா்ச்சியும் எந்ததெந்த துறைகளில் அதிகம் உள்ளது என்பது செய்தித்தாள்கள் மூலமும் பிற ஊடகங்கள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நிதின் கட்கரியின் துறையே சிறப்பாக உள்ளது.

அதே நேரத்தில் கட்கரியின் பேச்சும் சிறப்பாக உள்ளது. அவா் துறைரீதியான பணிகள் குறித்து மட்டுமே பேசுகிறாா். யாருக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் பேசுவதில்லை. இதன் காரணமாகவே ஆளும் கட்சியில் அவா் ஓரங்கட்டப்பட்டு வருகிறாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சமாஜவாதி கட்சித் தலைவரின் செல்வாக்கும் உயா்ந்துள்ளது. அகிலேஷ் யாதவை மக்கள் பெரிதும் விரும்புகின்றனா் என்றாா்.

தேசிய அளவிலும், உத்தர பிரதேச மாநில அளவிலும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சமாஜவாதி மூத்த தலைவா் கட்கரியை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.