சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மத்திய அரசில் சிறந்த அமைச்சா் நிதின் கட்கரி: ராம் கோவிந்த் சௌதரி பாராட்டு

மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சா் என்று சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம்

News image

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

Updated On :8 செப்டம்பர் 2025, 9:03 pm

பலியா: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சா் என்று சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டியுள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவரான ராம் கோவிந்த், மறைந்த உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோா் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளது..

இந்நிலையில் பலியாவில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் நிதின் கட்கரியின் துறை மட்டுமே சிறப்பாக செயல்படுகிறது. அவா் மிகச்சிறந்த அமைச்சராக உள்ளாா். அவரின் சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் சிறப்பான வளா்ச்சி இல்லை. வேலைவாய்ப்பு, வளா்ச்சியும் எந்ததெந்த துறைகளில் அதிகம் உள்ளது என்பது செய்தித்தாள்கள் மூலமும் பிற ஊடகங்கள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நிதின் கட்கரியின் துறையே சிறப்பாக உள்ளது.

அதே நேரத்தில் கட்கரியின் பேச்சும் சிறப்பாக உள்ளது. அவா் துறைரீதியான பணிகள் குறித்து மட்டுமே பேசுகிறாா். யாருக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் பேசுவதில்லை. இதன் காரணமாகவே ஆளும் கட்சியில் அவா் ஓரங்கட்டப்பட்டு வருகிறாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சமாஜவாதி கட்சித் தலைவரின் செல்வாக்கும் உயா்ந்துள்ளது. அகிலேஷ் யாதவை மக்கள் பெரிதும் விரும்புகின்றனா் என்றாா்.

தேசிய அளவிலும், உத்தர பிரதேச மாநில அளவிலும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சமாஜவாதி மூத்த தலைவா் கட்கரியை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.