அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹிமாச்சலின் மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

News image
வெடிகுண்டு மிரட்டல்- ENS
Updated On :9 செப்டம்பர் 2025, 11:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மால்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஹிமாசலின் மண்டி மாவட்டத்தின் நேர் சௌக்கில் உள்ள ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள பண்டித் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மண்டி தலைமையக டிஎஸ்பி தினேஷ் குமார் கூறுகையில், மருத்துவமனைகளில் முழுமையாக சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் மோப்ப நாய் படைகள் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிவளைத்தாக அதிகாரி கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாநில செயலகம், உயர் நீதிமன்றம், டிசி மண்டி அலுவலகம் உள்பட மாநிலத்தின் பல முக்கிய அரசு நிறுவனங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்தன. அவை அனைத்தும் புரளியேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Shri Lal Bahadur Shastri Medical College and Hospital on Ner Chowk of Mandi district and Pandit Jawahar Lal Nehru Government Medical College in Chamba district on Tuesday received bomb threats, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.