10 லட்சம் (1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாய்கள் கணக்கெடுப்பு, அவற்றுக்கு உணவு வழங்குவதை நெறிப்படுத்துதல் தொடர்பாகவும் சட்ட்விரோதமாக உரிய உரிமமைன்றி வளர்ப்பு பிராணிகள் கடைகளை விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் புதன்கிழமை(செப். 10) நடத்தப்பட்ட ஆலோசனையில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தேசிய தலைநகரில் தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்திருந்த நிலையில், அதற்கான செயல்திட்ட முறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தில்லி தலைமைச் செயலகத்தில் விலங்குகள் நல வரியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வெறிநாய்க்கடிக்கு தீர்வு காணப்படுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
நாய்களுக்கு சிப்கள் (சில்லுகள்) பொருத்தி கண்காணித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அதனை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய நவடிக்கைகல் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குச் சந்தைகளில் நடமாட்டத்தை கண்காணிக்க விலங்குச் சந்தை கண்காணிப்புக் குழுவும் அமைக்கபடவுள்ளது.
வெகுவிரைவில் இந்த நடவடிக்கைகள் அமலாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Summary
Around 1 million stray dogs to be microchipped over next 2 years: Delhi Minister Kapil Mishra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

கும்பகோணத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

நாய் உரிமையாளா்கள் 82 பேருக்கு ரூ. 4.10 லட்சம் அபராதம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



