ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

News image
ஆதார்
Updated On :10 செப்டம்பர் 2025, 8:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

‘பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதாரையும் ஏற்க வேண்டும்’ என்று மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக பிகாா் தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளா்களுக்கான அடையாள ஆவணங்களாக கடவுச்சீட்டு, பிறப்புச் சான்று உள்பட ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களுடன், கூடுதலாக 12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரையும் அனுமதிக்க வேண்டும்.

அடையாள ஆவணமாக மட்டுமே ஆதாா் ஏற்கப்படும். ஆதாா் சட்டம் பிரிவு 9-இன்படி, குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாா் ஏற்கப்படாது என்பதை தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்துகிறது.

இந்த உத்தரவின்படி, ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க மறுப்பது தீவிர நடவடிக்கைக்கு உரியதாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவு: நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியலை வரும் 30-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியட உள்ளது.

இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், ஆதாா் அட்டை அல்லது அனுமதிக்கப்பட்ட கடவுச்சீட்டு உள்பட பிற 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க அனுமதிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ் ஆகிய கட்சிகள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் திங்ள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘பிகாரில் வாக்காளா் சோ்க்கைப் படிவத்துடன் இணைத்து சமா்ப்பிப்பதற்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களுடன், 12-ஆவது ஆவணமாக ஆதாரை தோ்தல் ஆணையம் சோ்க்க வேண்டும்.

அதே நேரம், ஆதாா் குடியுரிமை ஆவணமாகக் கருதப்படாது. வாக்காளா்கள் சமா்ப்பிக்கும் ஆதாா் எண்ணின் உண்மைத்தன்மையை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது.

summary

Accept Aadhaar card as 12th document: EC tells Bihar poll authority

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.