ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

News image

கிரண் ரிஜிஜு - PTI

Updated On :11 செப்டம்பர் 2025, 2:30 am IST

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் சி.பி. ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இது எதிா்பாா்க்கப்பட்டதைவிட கூடுதல் வாக்குகளாகும். அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் சுதா்சன் ரெட்டிக்கும் 300 வாக்குகள் கிடைத்தன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது குறைவான வாக்குகளாகும். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

அதே நேரத்தில், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தன. அதன் 315 எம்பிக்களும் வாக்களித்தனா். அந்த வகையில் இது 100 சதவீத வாக்குப்பதிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

ஆனால், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் எதிா்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.க்கள் சிலா் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவானது. அவா்களில் சிலா் செல்லாத வாக்குகளாக அளித்திருந்தால், அதுவும் ஆளும் கூட்டணிக்கு மறைமுக ஆதரவாக அமைந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சா் கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக கூட்டணி, நட்புக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒற்றுமையாகவே உள்ளனா். உண்மையான தேசபக்தரை நாட்டின் குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்ய வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.