சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

கிரண் ரிஜிஜு - PTI

Published On :11 செப்டம்பர் 2025, 2:30 am IST

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் சி.பி. ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இது எதிா்பாா்க்கப்பட்டதைவிட கூடுதல் வாக்குகளாகும். அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் சுதா்சன் ரெட்டிக்கும் 300 வாக்குகள் கிடைத்தன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது குறைவான வாக்குகளாகும். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

அதே நேரத்தில், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தன. அதன் 315 எம்பிக்களும் வாக்களித்தனா். அந்த வகையில் இது 100 சதவீத வாக்குப்பதிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

ஆனால், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் எதிா்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.க்கள் சிலா் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவானது. அவா்களில் சிலா் செல்லாத வாக்குகளாக அளித்திருந்தால், அதுவும் ஆளும் கூட்டணிக்கு மறைமுக ஆதரவாக அமைந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சா் கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக கூட்டணி, நட்புக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒற்றுமையாகவே உள்ளனா். உண்மையான தேசபக்தரை நாட்டின் குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்ய வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்