மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமரின் தாயாரை அவமதித்ததற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.. உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
Updated On :10 செப்டம்பர் 2025, 8:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி இரண்டு நாள் பணமாக இன்று ரேபரேலிக்கு இன்று காலை சென்றுள்ளார்.

அவர் ஹர்சந்த்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அமைச்சர் தினேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதரவளார்களும் வழிமறித்து கத்வாராவில் உள்ள நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தொண்டர்கள், ராகுல் திரும்பிச் செல்லுங்கள், நாட்டில் உள்ள அனைத்து தாய்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் என்ற பதாகைகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.

பாஜக ஆதரவாளர்களின் போராட்டத்துக்குப் பயந்து ராகுல் வேறு வழியில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சிங்,

ராகுல் காந்திக்கும் ஒரு தாய் இருக்கிறார். வேறொருவரின் தாயைத் திட்டும் உரிமையை அவர் யாருக்கும் வழங்கக்கூடாது. ஒரு தாயைப் பற்றி இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களை அவர் கண்டித்திருக்க வேண்டும்.

அவதூறு பேசியவர்களை ஆதரிக்கவில்லை என்றும், அவர்களைத் தண்டிக்கப்படுவார்கள், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் அவர்களின் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பேன் என்றும் கூறியிருக்க வேண்டும்.

பிகாரில் தர்பங்காவின் புறநகரில் நடைபெற்ற விழாவில் நபர் ஒருவர் மோடியின் தாயைக் குறித்து அவதூறாகப் பேசியது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Uttar Pradesh Minister Dinesh Pratap Singh on Wednesday sat on a dharna at a highway to stop local MP Rahul Gandhi's convoy and demanded an apology for alleged abuses hurled at Prime Minister Narendra Modi's mother.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.