தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை ஃபெரோஸ் காந்தி காலனி அருகே நடந்தது. தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல, ரைடு-ஹெய்லிங் செயலி மூலம் ஆட்டோவை அந்த பெண் முன்பதிவு செய்திருந்தாா். பயணத்தின் போது, மதுபோதையில் இருந்த ஓட்டுநா் அவரது கையைப் பிடித்து, அவரது மடிக்கணினிப் பையைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
பீதியில், அந்தப் பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்து காயமடைந்தாா். சம்பவம் நடந்த உடனேயே ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
தப்பியோடியதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25-க்கும் மேற்பட்ட முறை போன் செய்து ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது.
நியூ காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ரைடு-ஹெய்லிங் நிறுவனம் ஓட்டுநரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது. விசாரணையைத் தொடங்கி, ஓட்டுநரின் பின்னணி உள்பட வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

கணவா் எரிவாயு சிலிண்டரால் தாக்கியதில் பெண் உயிரிழப்பு
பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு: சுங்கச் சாவடி மேலாளா் கைது

அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

