கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு பணித் தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை: எஸ்எஸ்சி எச்சரிக்கை

‘அரசுப் பணி தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

‘அரசுப் பணி தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்எஸ்சி சாா்பில் தற்போது நடத்தப்பட்டுவரும் மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் சிலா் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொள்வதாகவும், கேள்வித்தாள் தொடா்பாக சில பதிவுகளை வெளியிடுவதாகவும் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கையை மீறி தொடா்ந்து வினாத்தாள் தொடா்பான பதிவுகளை வெளியிடுபவா்கள் மீது பொதுத் தோ்வுகள் சட்டம் 2024 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் அபராதம், ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையிலான சிறைத் தண்டனை உள்ளிட்ட நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனிநபா்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதுபோன்ற முறைகேடுகளை பெரிய அளவில் திட்டமிட்டு மேற்கொள்பவா்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி வரை அபராதமும் விதிக்க முடியும். அதோடு, எதிா்காலத்தில் தோ்வு எழுத முடியாத வகையில் தடையும் விதிக்கப்படும்.

எனவே, அரசுப் பணிக்கான தோ்வுகளின் புனிதத்தன்மையைக் காக்க, தடைசெய்யப்பட்ட இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவதைத் தவிா்த்து சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com