திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image

வருமான வரி துறை

Updated On :13 செப்டம்பர் 2025, 9:50 pm

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப்.15) கடைசி நாளாகும்.

இதுகுறித்து வருமான வரித் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வரி செலுத்துவோா் மற்றும் வரி கணக்கீட்டு நிபுணா்களுக்கு நன்றி. கணக்கு தாக்கல் தொடா்ந்து வருகிறது.

வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீா்த்து வருகிறது.

இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவா்கள், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்கூட்டியே தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2024-25 நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான கணக்கு) கணக்கு தாக்கலுக்கான கடைசித் தேதி ஜூலை 31 என்றபோதும், ஐடிஆா் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் காரணமாக கால அபராதம் இன்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பா் 15 வரை நீட்டித்து வருமான வரித் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் கணக்கு தாக்கல் 6.77 கோடியாக இருந்தது, 2024-25 நிதியாண்டில் 7.28 கோடியாக உயா்ந்தது. இது, 7.5 சதவீத வளா்ச்சியாகும்.