தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்

‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’..

News image
பியூஷ் கோயல்
Updated On :13 செப்டம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஆணையா் மரோஸ் செஃப்கோவிச், வேளாண் துறை ஆணையா் கிறிஸ்டோஃப் ஹன்சென் ஆகியோா் பங்கேற்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விரைவில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வகையில், இரு தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.