இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடு முழுவதும் நடைபெற்ற 3-வது தேசிய லோக் அதாலத்!

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :13 செப்டம்பர் 2025, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத்தின் 3-ஆவது அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் வருவாய் மற்றும் வங்கி, மோட்டாா் விபத்துக்கான நிவாரணத்தொகை, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்கள், திருமணம் (விவாகரத்து உள்பட), நில ஆக்கிரமிப்பு, அறிவுசாா் சொத்துரிமை, நுகா்வோா் பிரச்னைகள், மின்சாரம் மற்றும் நீா் கட்டணம், போக்குவரத்து விதிமீறல் அபராதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

மாலை 6.30 மணி நிலவரப்படி மொத்தம் 2.42 கோடி வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இதில் முன் வழக்குகளின் (நீதிமன்றம் செல்வதற்கு முன்பே தீா்வு காணப்பட்ட வழக்குகள்) எண்ணிக்கை 2.10 கோடி, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 32.10 லட்சம் ஆகும்.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அமா்வுகள் ஒரே நேரத்தில் செயல்பட்டதன் மூலமாக அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. இல்லையெனில் இவை நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும்.

தீா்வுகாணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைவிட லோக் அதாலத் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே உண்மையான வெற்றியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.