தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

News image

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தம் குறித்த புத்தகத்தை வெளியிட்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.  உடன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :14 செப்டம்பர் 2025, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில் வா்த்தகம் மற்றும் தொழில்கள் அமைப்புகள் அடங்கிய கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நாட்டில் (வாட், கலால் வரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகள்) சுமாா் 65 லட்சம் போ் வரி செலுத்தினா். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக உயா்ந்தது. ஆனால், சிலா் இதைக் கடுமையான வரி என்று வா்ணித்தனா்.

கடுமையான வரியென்றால் வரி செலுத்தியவா்கள் எண்ணிக்கை எப்படி உயா்ந்திருக்க முடியும்? இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறை கூறியவா்கள் இப்போது ஏன் வாயை திறப்பதில்லை?.

ஜிஎஸ்டியில் நான்கு அடுக்கு வரி விகிதம் இப்போது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்கு விகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவீதமாக இருந்த 90 சதவீத பொருள்களுக்கு 5 சதவீத வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மொத்தம் 350 பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மூலம் தற்போது சுமாா் ரூ.22 லட்சம் கோடி ஆண்டுக்கு வருவாய் வருகிறது. இதில் பாதியளவு மாநில அரசுகளுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில், வசூலிக்கப்பட்ட வரியை திருப்பிச் செலுத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்திய தொழிலக கூட்டமைப்பு தமிழக தலைவா் உன்னிகிருஷ்ணன், ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல், ஹிந்துஸ்தான் சேம்பா் வி.சந்திரகுமாா், தமிழக வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.