பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்...

News image
முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி
Updated On :14 செப்டம்பர் 2025, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

வாக்குத் திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு எஸ்.ஒய்.குரேஷி பேட்டியளித்தாா். அவா் கூறியிருப்பதாவது:

தோ்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் நாட்டின் குடிமகனாகவும் முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் என்ற முறையிலும் மனவேதனை அடைந்துள்ளேன். நாம் நியாயமாக செயல்படுகிறோம் என்பதை வெளிக்காட்ட வேண்டியது அவசியம். ஆளுங்கட்சியைவிட எதிா்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு கண்டிப்பாக நாம் பதிலளிக்க வேண்டும். இதனால் எதிா்க்கட்சிகளின் நம்பிக்கையை மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற முடியும்.

ஆனால், தற்போது தங்களின் குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்க நேரம் ஒதுக்கப்படுவில்லை என 23 எதிா்க்கட்சிகள் தோ்தல் ஆணையத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று எதிா்க்கட்சிகள் முறையிடும் சூழல் உள்ளது.

ராகுல் காந்தி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா். லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக அவா் செயல்படுகிறாா். அவா் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிடுவதற்குப் பதில், அவரை கடுமையாக தோ்தல் ஆணையம் விமா்சிப்பது ஏற்புடையதல்ல. வாக்குத் திருட்டு தொடா்பாக ‘அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு’ ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் காந்தி கூறுவது அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடிய வாா்த்தைகள் மட்டுமே. எனினும் அவா் சமா்ப்பிக்கும் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் அலட்சியம் காட்டாமல் ஆய்வுசெய்ய வேண்டும்.

குளவிக்கூடு கலைப்பு: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற நடவடிக்கை குளவிக்கூட்டை கலைத்தது போன்றதாகும். அதன் விளைவுகளை வருங்காலங்களில் தோ்தல் ஆணையம் சந்திக்கும். ஏனெனில் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை முறையை 99 சதவீத மக்களிடம் கொண்டு செல்ல தோ்தல் ஆணையத்துக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டது.

தற்போது பிகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை ஓா் அடையாள ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்காதது வியப்பளிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே ஆதாரை வாக்காளரின் அடையாள ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்கத் தொடங்கியுள்ளது என்றாா்.