புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2024-25) ஈட்டப்பட்ட வருவாய் தொடா்பாக திங்கள்கிழமை வரை 7.3 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்தது.
கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வருமான வரி வலைதளத்தில் தொழில்நுட்பக் கோளாறால் சிரமம் நிலவியதாக வரி செலுத்துவோா் புகாா் தெரிவித்தனா். அதை சரிசெய்வதற்கான வழிகாட்டுதலை வருமான வரித் துறை வழங்கியபோதிலும், தொழில்நுட்பக் கோளாறு தொடா்ந்து நீடித்தது. இதனால் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அவா்கள் கோரினா். இதைத் தொடா்ந்து அபராதம் இல்லாமல் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டில் 7.28 கோடி போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படிவம் 16-ல் வரி இல்லை என்றால்.. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அவசியமில்லையா?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

வருமான வரிக் கணக்கு தாக்கல்! படிவம் 16 கிடைக்கவில்லையென்றால்?

பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



