3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை

நாடாளுமன்றம்

Published On :16 செப்டம்பர் 2025, 5:25 am IST

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடியில் டென்டரை அறிவித்துள்ளது. அதில், ‘நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி விடியோ கண்காணிப்புடன் கூடி மின்வேலி அமைக்கப்பட வேண்டும். நுழைவாயில்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

கண்ணாடி இழை அடிப்படையிலான கண்காணிப்பு திட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நான்கு மாதங்களில் இந்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஊடுருவ முயன்ற 20 வயதான நபரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.