ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை "ஷீஷ் மஹால்" என்று பாஜகவால் முத்திரை குத்தப்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் கேஜரிவால் வசித்து வந்தார். தில்லியின் முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த வீட்டைப் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், அதிக விலையுயர்ந்த ஆடம்பர பொருள்கள் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.
இதையடுத்து, பஞ்சஜன்யா நடத்திய ஆதார் இன்ஃப்ரா கன்ஃப்ளூயன்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
பங்களா கட்டுவதற்காக தில்லி மக்கள் கடினமாக உழைத்த பணத்தை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் வீணடித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஷீஷ் மஹால் தில்லி அரசின் வெள்ளை யானை போன்று உள்ளது. இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்து வருகிறோம். இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையில் 2022ல் ரூ. 33.86 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டதாக மதிப்பிட்டுள்ளார். இருப்பினும், ரூ. 75-80 கோடி செலவிடப்பட்டதாகப் பாஜக தலைவர்கள் கூறினர்.
இந்த நிலையில், ஷீஸ் மஹாலில் தில்லி மக்களின் பொது வளங்கள் வீணடிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது, அதற்காகச் செலவிடப்பட்ட முழுப் பணமும் அரசு கருவூலத்திற்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
The "Sheesh Mahal" bungalow is like a "white elephant" and the Delhi government is yet to decide about its fate, Chief Minister Rekha Gupta said on Monday about the official residence used by Arvind Kejriwal when he was the Delhi CM.
இதையும் படிக்க: செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு தில்லியில் கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!

கால்பந்து இறுதிப் போட்டி: தில்லி உணவகங்கள், கஃபேக்கள் அதிகாலை வரை செயல்படும்!

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



