தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :16 செப்டம்பர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் பணியாற்றிய ஏசிஎஸ் அதிகாரி நூபுா் போரா மீது லஞ்ச புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவரின் வீட்டில் மாநில முதல்வரின் சிறப்பு ஊழல் கண்காணிப்புப் பிரிவு திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது. அப்போது ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நூபுா் போரா கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அந்தப் பிரிவின் மூத்த காவல் கண்காணிப்பாளா் ரோசி கலிதா கூறுகையில், முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், நூபுா் போரா கைது செய்யப்பட்டதாக தெரிவித்தாா்.

400 மடங்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: இதுதொடா்பாக பக்ஸா மாவட்டத்தில் மாநில முதல்வா் ஹிமந்த் விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டவிரோத நில பரிவா்த்தனை ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததால் நூபுா் போரா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து கடந்த 6 மாதங்களாக அவா் கண்காணிக்கப்பட்டு வந்தாா். தனது வருமானத்தைவிட 400 மடங்கு அதிகமாக அவா் சொத்து குவித்துள்ளாா். பொதுமக்கள் விழிப்பாக இருந்து அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகாா் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.