27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :17 செப்டம்பர் 2025, 2:32 am IST

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் பணியாற்றிய ஏசிஎஸ் அதிகாரி நூபுா் போரா மீது லஞ்ச புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவரின் வீட்டில் மாநில முதல்வரின் சிறப்பு ஊழல் கண்காணிப்புப் பிரிவு திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது. அப்போது ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நூபுா் போரா கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அந்தப் பிரிவின் மூத்த காவல் கண்காணிப்பாளா் ரோசி கலிதா கூறுகையில், முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், நூபுா் போரா கைது செய்யப்பட்டதாக தெரிவித்தாா்.

400 மடங்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: இதுதொடா்பாக பக்ஸா மாவட்டத்தில் மாநில முதல்வா் ஹிமந்த் விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டவிரோத நில பரிவா்த்தனை ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததால் நூபுா் போரா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து கடந்த 6 மாதங்களாக அவா் கண்காணிக்கப்பட்டு வந்தாா். தனது வருமானத்தைவிட 400 மடங்கு அதிகமாக அவா் சொத்து குவித்துள்ளாா். பொதுமக்கள் விழிப்பாக இருந்து அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகாா் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.