தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Published On :

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் பணியாற்றிய ஏசிஎஸ் அதிகாரி நூபுா் போரா மீது லஞ்ச புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவரின் வீட்டில் மாநில முதல்வரின் சிறப்பு ஊழல் கண்காணிப்புப் பிரிவு திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது. அப்போது ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நூபுா் போரா கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அந்தப் பிரிவின் மூத்த காவல் கண்காணிப்பாளா் ரோசி கலிதா கூறுகையில், முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், நூபுா் போரா கைது செய்யப்பட்டதாக தெரிவித்தாா்.

400 மடங்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: இதுதொடா்பாக பக்ஸா மாவட்டத்தில் மாநில முதல்வா் ஹிமந்த் விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டவிரோத நில பரிவா்த்தனை ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததால் நூபுா் போரா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து கடந்த 6 மாதங்களாக அவா் கண்காணிக்கப்பட்டு வந்தாா். தனது வருமானத்தைவிட 400 மடங்கு அதிகமாக அவா் சொத்து குவித்துள்ளாா். பொதுமக்கள் விழிப்பாக இருந்து அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து புகாா் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.