சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த, ஜான்ஸி என்றழைக்கப்படும் பெண் ஒருவரை பிடிக்க காவல் துறையினர் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கரியாபந்து காவல் துறையினரிடம் இன்று (செப்.16) அவர் சரணடைந்துள்ளதாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் திட்டத்தின் அடிப்படையில், சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்காக உடனடியாக ரூ.1.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In Chhattisgarh, a female Naxal, who was wanted with a reward of Rs 8 lakh, surrendered to security forces today (September 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்டா பகுதியை வறட்சியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்குக: ஜவாஹிருல்லா

வயநாடு நிலச்சரிவில் கடைசியாக தேடப்பட்டவரும் சடலமாக மீட்பு! பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
ரூ. 70 லட்சம் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டுப் பெண் தில்லியில் கைது!







