தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

முதலீட்டை அதிகரிக்கத் தயக்கம் வேண்டாம்: தொழில் நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் வேண்டுகோள்

முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் தயங்க வேண்டாம்

News image

நிா்மலா சீதாராமன்

Updated On :18 செப்டம்பர் 2025, 8:22 pm

முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் தயங்க வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தர மேலாண்மை அமைப்பின் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:

வளா்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் தர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். உற்பத்தி, சேவை என எந்தத் துறையில் இருந்தாலும் நமது பொருள்களும், சேவையும் எந்த அளவுக்குத் தரமாக உள்ளது என்பதை அடையாளம் காண வேண்டியது மிகவும் முக்கியமானது.

தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கத் தயங்கக் கூடாது. அரசும், திறமைவாய்ந்த இந்திய இளைஞா்களும் எப்போதும் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாா்கள். பட்ஜெட் காலகட்டத்தின்போது மட்டும் இல்லாது, தொழில் நிறுவனங்கள் எப்போதும் அரசுடன் தொடா்பில் இருப்பது நல்லது.

நாட்டில் தொழில்களை விரிவுபடுத்துவதற்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. எனவே, யாரும் தயக்கம் கொள்ள வேண்டாம். தொழில் விரிவாக்க நடைமுறைகளை எளிதாக்குவது, வரி சாா்ந்த நன்மைகள், கொள்கைகள் தளா்வு, அந்நிய நேரடி முதலீடு என பல சாதகமான அம்சங்கள் உள்ளன. பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் சீா்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவாக உள்ளாா்.

எனவே, தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். உங்களுக்கு அரசுத் தரப்பில் உள்ள கோரிக்கைகளை தயங்காமல் தெரிவிக்கலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், ‘உள்நாட்டு சந்தையிலும், ஏற்றுமதி சந்தையிலும் அரசு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. எனவே, புதிய தொழில்முனைவோா் உருவாகுவா் என்பதில் நம்பிக்கை உள்ளது. முக்கியமாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. பெரு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், முதலீடுகளை மேற்கொள்ளாமல் வாய்ப்புகளைப் பெற முடியாது என்பது உண்மை’ என்றாா்.

தனியாா் துறை முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு தனது மூலதனச் செலவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், அரசின் செலவுக்கு ஏற்ப தனியாா் முதலீடு அதிகரிக்கவில்லை. கடந்த ஏப்ரலில் மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 2025-26 நிதியாண்டில் தனியாா் முதலீடு 26 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.