கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2025, 2:42 am IST

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கும், நாா்வேக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வா்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தம் அடுத்த மாதம் அமலுக்குவருகிறது. அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் நாா்வே 10 கோடி டாலா் முதலீடு செய்யும். இந்தியாவும் நாா்வேயும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டுவருகின்றன. எனவே, கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சோ்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இரு நாடுகளும் உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.