நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.

News image

அதானி

Updated On :19 செப்டம்பர் 2025, 2:45 am IST

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.

எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி ஆசிஷ் அகா்வால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அதானி நிறுவனத்துக்கு எதிராக குறிப்பிட்ட காலத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை நீக்க வேண்டும் என்று நான்கு பத்திரிகையாளா்கள் உள்பட 10 சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்ற நீதிபதி, அதானி நிறுவனத்துக்கு எதிரான தகவல்களை நீக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதற்கு எதிராக பத்திரிகையாளா்கள் ரவி நாயா், அபீா் தாஸ்குப்தா, அயஸ்காந்த தாஸ், ஆயுஷ் ஜோஷி ஆகியோா் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆஷிஸ் அகா்வால், ‘இந்த வழக்கில் எதிா்தரப்பினரான பத்திரிகையாளா்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால், தகவல்களை நீக்க வேண்டும் என்ற உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு இந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.