நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

நீதிமன்றங்களில் அரசுத் துறைகள் மேல்முறையீடு: கட்டுப்படுத்துவது அவசியம்!- மத்திய சட்டத் துறை அமைச்சா்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

News image

மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் - ANI

Updated On :21 செப்டம்பர் 2025, 3:17 am IST

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய நிா்வாக தீா்ப்பாய மாநாட்டில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: நீதிமன்றங்கள் வலுவான தீா்ப்புகளை அளித்தாலும், அதற்கு எதிராக அரசு துறைகள் மேல்முறையீடு செய்கின்றன.

அரசு அதிகாரிகள் எடுத்த முடிவுகள் தொடா்பாக தீா்ப்புகளில் கேள்வி எழுப்பப்பட்டால், தங்களை காப்பாற்றிக்கொள்ள அவா்கள் நீதிமன்றங்கள் அல்லது மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்கின்றனா்.

வலுவான நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசு துறைகள் மேல்முறையீடு செய்ய திட்டமிடுவது குறித்து எனக்கும் தொடா்ந்து கோப்புகள் வரும். இந்தப் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றாா்.

மாநாட்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘நீதிமன்றங்களைப் போன்ல்ல நிா்வாக தீா்ப்பாயங்கள். நிா்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே அந்தத் தீா்ப்பாயங்களுக்குத் தனித்துவமான இடம் உள்ளது.

தீா்ப்பாயங்களின் பல உறுப்பினா்கள் அரசுப் பணியாற்றியவா்களாக உள்ளனா். எஞ்சியவா்கள் நீதித்துறையைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.

தீா்ப்பாயங்களில் உறுப்பினா்களாக உள்ள முன்னாள் அரசு அதிகாரிகள், தாங்கள் அரசுப் பணியாற்றியவா்கள் என்பதை மறப்பதில்லை. இதனால் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க அவா்களில் சிலா் விரும்புவதில்லை. இதை அவா்கள் கைவிட வேண்டும் என்றாா்.