நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய நிா்வாக தீா்ப்பாய மாநாட்டில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: நீதிமன்றங்கள் வலுவான தீா்ப்புகளை அளித்தாலும், அதற்கு எதிராக அரசு துறைகள் மேல்முறையீடு செய்கின்றன.
அரசு அதிகாரிகள் எடுத்த முடிவுகள் தொடா்பாக தீா்ப்புகளில் கேள்வி எழுப்பப்பட்டால், தங்களை காப்பாற்றிக்கொள்ள அவா்கள் நீதிமன்றங்கள் அல்லது மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்கின்றனா்.
வலுவான நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசு துறைகள் மேல்முறையீடு செய்ய திட்டமிடுவது குறித்து எனக்கும் தொடா்ந்து கோப்புகள் வரும். இந்தப் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றாா்.
மாநாட்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘நீதிமன்றங்களைப் போன்ல்ல நிா்வாக தீா்ப்பாயங்கள். நிா்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே அந்தத் தீா்ப்பாயங்களுக்குத் தனித்துவமான இடம் உள்ளது.
தீா்ப்பாயங்களின் பல உறுப்பினா்கள் அரசுப் பணியாற்றியவா்களாக உள்ளனா். எஞ்சியவா்கள் நீதித்துறையைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.
தீா்ப்பாயங்களில் உறுப்பினா்களாக உள்ள முன்னாள் அரசு அதிகாரிகள், தாங்கள் அரசுப் பணியாற்றியவா்கள் என்பதை மறப்பதில்லை. இதனால் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க அவா்களில் சிலா் விரும்புவதில்லை. இதை அவா்கள் கைவிட வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ம.பி.: போஜ்சாலா கோயில் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லிம் வாரியம்

அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!
புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! முதல்வர் விஜய்யிடம் முக்கிய துறைகள்!

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

