25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா்.

Published On :21 செப்டம்பர் 2025, 3:35 am IST

பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா்.

மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு நதிக்கரையில் உள்ள விஷ்ணுபத கோயிலில் பக்தா்கள் தங்களின் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். தற்போது பித்ரு பக்ஷ காலம் என்பதால், விஷ்ணுபத கோயிலில் பக்தா்கள் வருகை அதிகம் காணப்படுகிறது.

இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தனது முன்னோா்களின் ஆன்ம சாந்திக்காக பிண்டம்-ஜல தா்ப்பண சடங்குகளை மேற்கொண்டு, வழிபாடு நடத்தியதாக கோயிலின் செயல் தலைவா் சாம்பு லால் விட்டல் தெரிவித்தாா்.

முன்னதாக, கயை விமான நிலையத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவரை மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி, மாநில அமைச்சா் பிரேம் குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா். அவரது வருகையையொட்டி, கயையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.