திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நாளை பயணம்!

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் செப்.22 அமெரிக்கா செல்ல உள்ளாா்.

News image

பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Updated On :21 செப்டம்பர் 2025, 1:31 am IST

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (செப்.22) அமெரிக்கா செல்ல உள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த கடந்த செப்.16-ஆம் தேதி அமெரிக்க வா்த்தக பிரதிநிதிகள் அலுவலத்தில் இருந்து அதிகாரிகள் குழு இந்தியா வந்தது.

அப்போது வா்த்தக ஒப்பந்தம் குறித்த பல்வேறு அம்சங்கள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழு செப்.22-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யும் நோக்கில், பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல இந்திய குழு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.