காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள்: ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும்! - ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி...

News image
ராகுல் காந்தி- IANS
Updated On :20 செப்டம்பர் 2025, 10:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்க ஹைட்ரஜன் அணுகுண்டு விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கேரளத்தில் வயநாட்டில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"வாக்குத் திருட்டு குறித்து இந்தியாவில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைப்பேன். அது யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைக்கும். அதன்மூலமாக வாக்குத் திருட்டுக்கு மேலும் ஆதாரங்களை வழங்குவேன்.

நாங்கள் சொல்வதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் கூறவில்லை. இதுவரை நடந்த பல விஷயங்களுக்கு எங்களிடம் 100% ஆதாரங்கள் உள்ளன. இவை விரைவில் வெளியே வரப் போகின்றன.

பிரதமரின் வாராணசி தொகுதியில் இதுபோன்று நடந்திருக்கிறதா என்று ஊடகங்களின் ஊகங்களுக்கு விடுகிறேன். நான் என்னுடைய வேலையைச் செய்கிறேன்.

வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்கள் ஹைட்ரஜன் குண்டுபோல வெடிக்கும்.

ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வருகிறது.

வாக்குத் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள் குறித்த தகவல்களை சிஐடி கேட்டுள்ளது. ஆனால், கர்நாடக சிஐடி கேட்கும் தகவல்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழங்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் ஏன் வழங்க மறுக்கிறார்? அவர் மீது இதைவிட பெரிய குற்றச்சாட்டு எதுவும் இருக்க முடியாது" என்றார்.

summary

Will soon reveal hydrogen bomb to prove vote theft by Modi, says Rahul Gandhi in Wayanad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.